ஆரணி வட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறையில் சீல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 நடைபெற்றதை தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான திரு. க. தர்ப்பகராஜ் அவர்கள் இன்று (24.04.2026) ஆரணி வட்டம், தச்சூர் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் அமைந்துள்ள பாதுகாப்பு வைப்பறையில் ஆரணி, போளூர், செய்யாறு, வந்தவாசி சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைத்து சீல் வைத்தார்.மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதையும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தார்.

Share Article

Edit Template
Copyright © 2025 Aranionline.com, All Rights Reserved.

Powered by J B Soft System, Chennai.